தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இல்லம் தேடி கல்வி திட்ட விளக்கம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இல்லம் தேடி கல்வி திட்ட விளக்கம்

இல்லம் தேடி கல்வி திட்ட விளக்கம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் வீதி இயங்கி வரும் இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்களுக்கு தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாணவர்களை கைத்தறி நெசவு கூடத்திற்கு அழைத்துச் சென்று கைத்தறி நெசவு பற்றியும் நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுகந்தி மற்றும் நெசவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பால்ராஜ் நெசவு தொழில் பற்றி மாணவர்களிடையே கூறினார்கள் ஒரு பட்டு சேலை நெய் வதற்கு 15 ஆயிரம் முறை கை கால்களை அசைக்க வேண்டியுள்ளது என்றும் சிறந்த ஒரு உடற்பயிற்சி என்றும் ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் ஆடை மட்டுமே ஒரு மனிதனை அழகாக காட்ட இயலும் என்று விளக்கிப் பேசினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பரமன் பாண்டியன் மற்றும் ஜல்லிக்கட்டு வினோத் ஆகியோர் நெசவுத் தொழிலை பயன்பாட்டினை மாணவர்களுக்கு விளக்கினர்.

நெசவாளர்களுக்கு மாணவ மாணவிகள் நெசவு துண்டு அணிவித்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வை விடியல் பிரகாஷ் இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் நிகழ்வில் தீனா ராணி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story