மணிப்பூர் கலவரத்தை கண்டித்து, திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை   கண்டித்து, திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம் 

மணிப்பூர் கலவரத்தில் மாதக் கணக்கில் பெண்கள் மீது கொடுர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டிக்காமல் இருக்கும் மத்திய மற்றும் அம்மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து, நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி தலைமை தாங்கினார். இராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.ஜோதிலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் வெ.கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைமைக் கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணி மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்(மகளிர்), வார்டு மற்றும் கிளை கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், கழக மகளிர் தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டு மணிப்பூர் பாஜக மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர், பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story