ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பேட்ச் வழங்கிய முன்னாள் அமைச்சர்

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பேட்ச் வழங்கி வாழ்த்தினார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் ஸ்ரீகற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பேட்ச் மற்றும் ஸ்டிக்கர் வழங்கும் விழா சங்க தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்கள் 65 நபர்களுக்கு பேட்ச் மற்றும் ஸ்டிக்கர் வழங்கி வாழ்த்தினார். இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து எடுத்துரைத்தார். இதில் நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story