ராசிபுரத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்ட் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா திறந்து வைத்தனர்

ராசிபுரத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்ட் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா திறந்து வைத்தனர்

ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு 

ராசிபுரம் பட்டை பெருமாள் கோவில் பகுதியில், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்ட்டை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பட்டை பெருமாள் கோவில் பகுதியில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஆட்டோ ஸ்டேண்ட் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான பி.தங்கமணி மற்றும் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டேண்டை திறந்து வைத்தனர்.

இதில் கலந்து கொண்ட அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்.புதுப்பாளையம் அருகேயுள்ள கல்லாங்குளம் பகுதியில் அதிமுக சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் மரக்கன்று நட்டனர்.

தொடர்ந்து, கல்லாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்காக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி., டிவி வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கல்லாங்குளம் பகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்தும், தொடர்ந்து ஆலோசனை வழங்கி பூத் கமிட்டி கையேடுகளை வழங்கினர். தொடர்ந்து, அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், ராசிபுரம் ஒன்றிய செயலாளர்கள் வேம்பு சேகரன், நாமகிரிப்பேட்டை E.K.பொன்னுசாமி, வெண்ணந்தூர் தாமோதரன், ஏடிசி சேகர், மாவட்ட அவைத் தலைவர் S.P.கந்தசாமி, கல்லாங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ் நாராயணன், செல்வம், புதுப்பாளையம்

ரவி மன்னன், துணைத் தலைவர் பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,

Tags

Next Story