பேருந்து நிழற்குடை மீது கார் மோதி விபத்து... புதுக்கோட்டையில் நிகழ்ந்த சோகம்!!

பேருந்து நிழற்குடை மீது கார் மோதி விபத்து... புதுக்கோட்டையில் நிகழ்ந்த சோகம்!!
புதுக்கோட்டையில் பேருந்து நிழற்குடை மீது கார் மோதி விபத்துக்குள்ளாதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை விராலிமலையில் பேருந்து நிழற்குடையில் கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டையில் லஞ்சமேடு பகுதியில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் காரில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் பயணம் செய்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் காணப்பட்ட நிலையில் காரில் பயணித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story