பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மிதிவண்டி வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது . . இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை நகர்மன்ற தலைவர் பாலமுருகன், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவருமான மதுரா செந்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story