ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக டிசம்பர் 2023 இல் நடைபெற உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - துறைத் தேர்வுகளுக்கான பயற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா மாவட்டத் தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் முனைவர் சிவராமன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் வீரகடம்ப கோபு நிறைவுறை வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினர். அமைப்பின், மாவட்ட துணைத் தலைவர் தனபால், மாவட்ட இணைச் செயலாளர் பாண்டி, மாவட்ட தணிக்கையாளர் தோழர். கார்த்திக், வட்டார நிர்வாகிகள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அமைப்பாளர் மலர்விழி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story