போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்

செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்

தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP

I, II & IV தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட

பாடத்திட்டத்தின் படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

வழிகாட்டும் மையத்தில் 14.07.2023 அன்று துவங்கப்பட உள்ளது.

நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் தற்போது நடைபெற்ற TNPSC

GROUP II Preliminary தேர்வில் 37 பேர் தேர்ச்சிப் பெற்று முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

TNPSC GROUP IV தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர். 2022 ஆண்டு

TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022

ஆம் ஆண்டு TNUSRB PC தேர்வில் 17 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர்

என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டிற்கான TNPSC GROUP – I, II &IV தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி

வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை பயிற்சி வகுப்புகள்

நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி

வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்விற்கான TEST BATCH ஒவ்வொரு வாரமும்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள

மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ

அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு

தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்

பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport size புகைப்படம்

மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி

வழிகற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில்

பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான

பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல்

மாவட்ட ஆட்சியர் ச.உமா, தெரிவிக்கிறார்.

Tags

Next Story