ரம்மி விளையாட்டால் கணவன் பணத்துடன் மாயம், மனைவி போலீசில் புகார்

ரம்மி விளையாட்டால் கணவன் பணத்துடன் மாயம், மனைவி போலீசில் புகார்

போலீசில் புகார்

குமாரபாளையத்தில் ரம்மி விளையாட்டால் கணவன் பணத்துடன் மாயமானதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் காவேரி நகர் பூசாரிகாடு பகுதியில் வசிப்பவர் கார்த்திகா (29) கூலித் தொழிலாளி. இவரது கணவர் மணிகண்டன் (34). கூலித் தொழிலாளி. மணிகண்டன் கடந்த ஆக. 27 மாலை 2:30 மணி முதல் காணவில்லை எனவும், போகும்போது வீட்டில் இருந்த பணம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார், எனவும், மணிகண்டன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர் என்றும், அதிக பணத்தை இதன் மூலம் இழந்துள்ளார் எனவும் கார்த்திகா கூறியுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு கார்த்திகா குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.

Tags

Next Story