தொப்பப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் - K.பொன்னுசாமி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

தொப்பப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் - K.பொன்னுசாமி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

அங்கன்வாடி மையம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் K.P.இராமசுவாமி தலைமை தாங்கினார். சீராப்பள்ளி பேரூராட்சி தலைவர் துணை தலைவர் N.செல்வராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் (கி) சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணை தலைவர் குப்பன், அலகேசன், குமார், லட்சுமி, தாமோதரன், முருகபெருமாள், இலங்கேஸ்வரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் K.இளையப்பன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், உழவன் நண்பன் கேசவன் மற்றும் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story