ஆயத்த ஆடைகளாக உற்பத்தி அழகு அமைக்க கடன் திட்டங்கள் - மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

மாவட்ட ஆட்சியர் ச.உமா

மாவட்ட ஆட்சியர் ச.உமா 

தமிழ்நாடு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் மூலம் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க கடன் திட்டங்கள் உள்ளது. அதன்படி இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவோர்

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 இருக்க வேண்டும், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of micro, small and medium enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும், குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும், 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினார் வகுப்பைச் சார்ந்த மக்கள் குழுவாக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை

(அறை எண்.28) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கப்பட வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்ததகுதியான மக்கள் குழுவாகமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி மேற்படி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story