அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் - மதுரா செந்தில் வழங்கினார்

அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் - மதுரா செந்தில் வழங்கினார்

இலவச மிதிவண்டிகள்

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் மயில்சாமி, சாந்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story