அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது

குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது செய்யபட்டார்.

குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். பாறையூர் பகுதியில் நேற்று காலை 07:00 மணியளவில் ஒருவர் மது விற்றுக்கொண்டிருந்தார். கையும் களவுமாக பிடித்த குமாரபாளையம் போலீசார், அவரிடமிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். போலீசார் விசாரனையில் அவர் பெயர் சரவணன், 45 என்பதும், காட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

குமாரபாளையம் பகுதியில் விதி மீறி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களும் ஒத்துழைப்பும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story