உரிமமின்றி மருந்து, மாத்திரை விற்பனை செய்ய கூடாது

ஜெயகுமார் வெள்ளையன் வேண்டுகோள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வணிகர்கள் தங்களது மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் டோலோ-650, சாரிடான், அனாசின், கால்பால், விக்ஸ் ஆக்‌ஷன்-500 போன்ற எவ்வித மருந்து, மாத்திரைகளையும் அதற்கான உரிமம் பெறாமல் விற்பனை செய்ய கூடாது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

அவ்வாறு முறையான உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆய்வில் பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கு பதிவும் செய்யப்படும். எனவே வணிக பெருமக்கள் இம்மாதிரியான மருந்து பொருட்களை விற்பனை உரிமம் பெறாமல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்று எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும் (Rat Killer) விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்க வேண்டாம் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story