குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு தேசிய தரச்சான்று

குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளதால், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் குழு படம் எடுத்துக் கொண்டனர்.
குமாரபாளையம் ஜி.ஹெச்.ல். மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பலனாக தேசிய தரச்சான்று கிடைக்கபெற்றுள்ளது.
இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் மூன்று கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இதன்பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இது மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து மூன்றாவதாக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கிடைத்துள்ளது. மேலும் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை, ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, மாநில சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தரச்சான்று பெற்றதன் பலனாக அதிக படுக்கை வசதிகள், அதிக டாக்டர்கள், அதிக செவிலியர்கள், அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
