பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் - மதுரா செந்தில் பங்கேற்பு

பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் - மதுரா செந்தில் பங்கேற்பு

மதுரா செந்தில்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட திமுக நகரம் பேரூர் ஒன்றிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் ஆவரங்காடு பகுதியில் உள்ள பள்ளிபாளையம் நகர திமுக கட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளிபாளையம் நகர திமுகவை தலைவர் குலாப்ஜான் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான சேர்மன் செல்வராஜ் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவருமான மதுரா செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்புரையாற்றிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யும் வகையில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அயராத உழைக்க வேண்டும் என்றும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியை திமுகவினுடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என்று சபதம் ஏற்றனர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story