ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கைலாசநாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ நந்தி பகவானுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நந்தி பகவானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பிரதோஷ தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story