மழை நீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மழை நீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம், பழனி ஆண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி ஏரி வரை மழை நீர் வடிகால் அமைத்து ஊருக்குள் தேங்கும் மழை நீரை அகற்ற நகராட்சி சார்பில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சட்டையம்புதூர் பகுதி மக்கள் நகராட்சி அலுவலக்தை முற்றுகை யிட வந்தனர். சட்டையம் புதூர் பகுதி வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படும் என பரவிய தகவலை அடுத்து தங்கள் ஊர் வழியாக கழிவுநீர் செல்லக்கூடாது என வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கு நூறு சதவீதம் சட்டையம் புதூர் வழியாக வழியாக எந்த வடிகால் அமைக்கும் திட்டம் இல்லை என நகர்மன்ற தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அதனால் சுமார் நகராட்சி அலுவலகத்தில் 1 மனி நேரத்திற்கும் மேல் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story