ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை

ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை

 பௌர்ணமி பூஜை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விசேஷத்தினங்கள் அன்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும்.

தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் உற்சவர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

பௌர்ணமி ஆவணி அவிட்டம் முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்திருந்தனர்.

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story