ராசிபுரம் காவல் ஆய்வாளரை கண்டித்து காவல் நிலைய உள்ளிருப்பு போராட்டம்.

ராசிபுரம் காவல் ஆய்வாளரை கண்டித்து   காவல் நிலைய உள்ளிருப்பு போராட்டம்.

உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக ராசிபுரம் நகரில் பொதுகூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கட்சி நிர்வாகிகள் மாநில இளைஞரணி துணை செயலாளர் ம.அறிவுத்தமிழன், கிழக்கு மாவட்ட செயலாளர் வீர.வினோத் சேகுவேரா, கிழக்கு மாவட்ட துணை செயலாளர் த.குமரவேல், கிழக்கு மாவட்ட நிதி செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ராசிபுரம் காவல் ஆய்வாளரிடம் சந்தித்து மனு கொடுக்க சென்ற போது, அந்த நிகழ்வின் பதிவிற்காக வெளியில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகளை பார்த்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் இங்கு புகைப்படம் எடுக்க கூடாது என்றும் போனை பிடிங்கி கொண்டு, வெளியே போங்க, எப்படி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்குறீர்கள் என்றும் பார்க்கலாம் என ஒருமையில் பேசியுள்ளார்.

ராசிபுரம் காவல் ஆய்வாளரை கண்டித்து அனைத்து மக்கள் சனநாயக உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பாக ராசிபுரம் காவல் நிலைய உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட போது இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் நாமக்கல் ADSP ஆகியோர் பேச்சுவார்தையில் ஈடுப்பட்டனர்.

இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சனநாயக உரிமை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் விசிக நாமக்கல் மையம் மாவட்ட செயலாளர் ஆ.நீலவானத்து நிலவன், அருந்ததியர் மக்கள் இயக்கம் மாநில துணை பொது செயலாளர் ரஜினி ராமசாமி, கொங்கு நாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் பேரவை தலைவர் பசுபதி சேகரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் சுமன், SDPI ராசிபுரம் நகர செயலாளர் நாசர், விசிக ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன், தேமுதிக ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, தமிழ்ப்புலிகள் நிர்வாகிகள் மார்க்ஸ் நவின், மதி, திவாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story