என்.கொசவம்பட்டி மாரியம்மனுக்கு ஸ்ரீ வாராஹி அலங்காரம்

நாமக்கல், துறையூர் சாலை, என்.கொசவம்பட்டி கவராநகர் மகா மாரியம்மன் கோவில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மன் ஸ்ரீ வாராஹி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் துறையூர் சாலை என்.கொசவம்பட்டி கவரா நகரில், பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த கோயிலில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் அம்மன் மாதம் என்பதால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு ஸ்ரீ வாராஹி அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story