ஸ்ரீ சக்தி கார்டனின் திருவிளக்கு பூஜை, ஸ்ரீ வரலட்சுமி பூஜை

ஸ்ரீ சக்தி கார்டனின் திருவிளக்கு பூஜை, ஸ்ரீ வரலட்சுமி பூஜை

திருவிளக்கு பூஜை

அணியாபுரம் ஸ்ரீ சக்தி கார்டனின் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, ஸ்ரீ வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் சக்தி கார்டனில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்தி கணபதி கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜையை சிவாச்சாரியார் பிரகாஷ் முன்னின்று நடத்தினார்.

இந்த திருவிளக்கு பூஜை, வரலட்சுமி பூஜை நிகழ்ச்சியில் சக்தி கார்டன் மற்றும் அணியாபுரத்தை சுற்றியுள்ள சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உலக மக்கள் நன்மைக்காகவும், கல்விச் செல்வம், தொழில் மற்றும் சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம், திருமணம் உள்ளிட்டவை சிறப்பாக அமைய கோயிலில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி கார்டன் நலச் சங்கத்தின் தலைவர் சுகந்தி, செயலாளர் பொன்னரசன் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர். இறுதியாக அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு வளையல்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story