27 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவ மாணவிகள்

27 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவ மாணவிகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்செங்கோடு அருகே 27 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவ மாணவிகள்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் நடுநிலைப்பள்ளி இந்த நடுநிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை படித்த 30 மாணவ மாணவிகள் பள்ளியில் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்,இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார், ஓசூர், நாமக்கல், கோயமுத்தூர், போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வரும் இவர்களை இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தனபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்து தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர், ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார், அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர் ஆண்டுதோறும் இதேபோன்று நாங்கள் ஒன்றிணைந்து தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டு அளவலாவினர் ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவியர்களிடையே தாங்கள் நடந்து கொண்ட இடம் குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் இந்த நிகழ்வில் முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போல இன்று தாங்கள் தங்கள் ஆசிரியர்களுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story