விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை கைவிடக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை கைவிடக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை கைவிடக்கோரி ஆசிரியர்கள் கூட்டு இயக்கம் சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ–ஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன் முன்னிலை வகித்தார். டிட்டோ–ஜாக் ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், நிர்வாகிகள் அண்ணாதுரை, சங்கர், கார்த்திகேயன், மாதேஸ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்

தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக, பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கண்டிக்கிறோம். அவற்றை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித் தரத்தை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வேண்டும்.

சி.ஆர்.சி., உள்ளிட்ட பயிற்சிகளுக்கான கருத்தாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதால், கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. கருத்தாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story