தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தீபாவளி விற்பனை துவக்கம்

தீபாவளி ஆவின் இனிப்பு வகைகள் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
சேலத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆவின் இனிப்பு வகைகள் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர். திறந்து வைத்த சில நிமிடத்திலேயே பொருட்களை மூட்டை கட்டி எடுத்துச் சென்ற ஆவின் ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் தீபாவளி இனிப்பு அறிமுக விழா மற்றும் விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோ கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். விற்பனையை தொடங்கி சில நிமிடத்திலேயே ஆவின் ஊழியர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்பு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் என அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்துச் சென்றதால் ஆவின் இனிப்பு வாங்க வந்த நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாவட்ட ஆட்சியர் தன் அறைக்கு சென்றவுடன் ஆவின் ஊழியர்கள் செய்த செயலால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story