குமாரபாளையம் நகர மன்ற தலைவர் ஆதரவு பெண் கவுன்சிலர்கள் மூவர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

குமாரபாளையம் நகர மன்ற தலைவர் ஆதரவு பெண் கவுன்சிலர்கள் மூவர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

அ.தி.மு.க.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் ஆதரவு பெண் கவுன்சிலர்கள் மூவர் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்கள்.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் த.விஜய்கண்ணன் சுயேட்சையாக போட்டியிட்டு, சுயேச்சை, தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். சில நாட்கள் முன்பு த.விஜய்கண்ணன் அ.தி.மு.க.வில் சேருவதாக பேசப்பட்டது. ஆனால் நேற்று இவரது ஆதரவு பெண் கவுன்சிலர்கள் நந்தினிதேவி, வள்ளியம்மாள், ரேவதி ஆகியோர், முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் சென்று, அ.தி.மு.க.வில் இணைந்தனர். நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story