குமரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பிரதீமா பவுமிக்

குமரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர்  பிரதீமா பவுமிக்

குமரிக்கு வருகை தரும் மத்திய அமைச்சர்


மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதீமா பவுமிக் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதீமா பவுமிக் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுமூலம் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்றார்.

அங்கு பாறையில் இயற்கையாகவே பதிந்திருந்த பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார். அதன்பிறகு அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்வையிட்டார். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே கண்ணாடி கூண்டு இழையினால் ஆன இணைப்பு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடக்கவில்லை. இதனால் மத்திய அமைச்சர் விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திரு வள்ளுவர் சிலையையும் பார்வையிட்டார். மத்திய அமைச்சர் வருகையை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story