கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மறதிநோய் தின விழிப்புணர்வு கண்காட்சி

கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மறதிநோய் தின விழிப்புணர்வு கண்காட்சி

விழிப்புணர்வு கண்காட்சி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மறதிநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கண்காட்சியை கல்லூரி தலைவர் க.சிதம்பரம் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ம.செந்தில்ராஜா வரவேற்றார்.

இந்த விழிப்புணர்வு கண்காட்சியை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பொறுப்பேற்று நடத்தினர். இதில் இந்நோயின் தோற்றம், பாதிப்பு, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் ஆட்டையாம்பட்டி பிரிவுரோடு பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story