குடும்ப ஆட்சி நீக்கி, மக்கள் நலன்போற்றும் நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம்: இபிஎஸ்

குடும்ப ஆட்சி நீக்கி, மக்கள் நலன்போற்றும் நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம்: இபிஎஸ்
X

EPS

79வது சுதந்திர தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகம் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்திரு நாடு விடுதலை பெற,போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்... வாழிய பாரத மணித்திரு நாடு ” என்று தெரிவித்துள்ளார்.

Next Story