அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது: ஈபிஎஸ்

அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது: ஈபிஎஸ்
X

EPS

அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இன்று ஆத்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் மக்களை சந்தித்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டம் ஒழுங்கு சீர்கேடு. போதை நடமாட்டம் அதிகரிப்பு, கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினமும் செய்திகளில் கொலை நிலவரம் வெளியாகிறது. திமுக செயலற்ற அரசு. திறமையற்ற முதல்வரால் போதையை கட்டுபடுத்த முடியவில்லை. நான் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை, இன்றைக்கு போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று பேசுகிறார். எல்லாம் சீரழிந்து முடிந்த பின்னர் இப்படி சொல்கிறார். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு அதிகரித்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை, 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை. சென்னையில் காவலரை சிலர் அடிக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்களைக் காப்பார்கள். 8 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பாதுகாப்பில்லை. குற்றவாளிகளுக்கு போலீஸைக்கண்டு அச்சமில்லை. நடுரோட்டில் வெட்டுகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலைகள் இங்கு வரும். திமுக என்றாலே ஊழல் ஆட்சிதான். அந்தக்காலம் முதல் இன்றுவரை அப்படித்தான். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. பத்திரப்பதிவு துறையில் 10% கமிஷன் கொடுத்தால்தான் பதிவு செய்கிறார்கள். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக தகவல். அமலாக்கத்துறை முதலில் ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வந்திருக்கிறது. அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் டாஸ்மாக் ஊழல் வெட்ட வெளிச்சமாக்கப்படும். சேலத்தில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில், நான் பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின். அப்படியெனில் பாதி கம்யூனிஸ்ட்டை திமுக விழுங்கிவிட்டது என்று அர்த்தம். கூட்டணிக் கட்சிகளே உஷாராக இருங்கள், உங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது, உங்கள் நிலையோ தலைகீழாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருக்கிறீர்கள், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது. அதிமுகவுக்கு சாதி, மதம் கிடையாது. அவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. போதைப்பொருள் புழக்கம் தாராளமாக உள்ளது என்றார்.

Next Story