அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் உடன் கே.எஸ்.ராஜ் கவுண்டர் சந்திப்பு!!

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் உடன் கே.எஸ்.ராஜ் கவுண்டர் சந்திப்பு!!
X

raj gounder

மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜை தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்.

புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு வரும் 30-11-2025 அன்று மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில், தலைமை சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி மாநாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாவட்ட கழக செயலாளர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், என்.நல்லசிவம், கே.எஸ்.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வி.சந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர். அதை முன்னிட்டு, மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்கும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழை, இன்று (27.10.2025) தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்.

Next Story