உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை.. நெல்லையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை.. நெல்லையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு!!
X

அமித்ஷா

திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​கிறார்.

தமிழகம் முழு​வதும் 7 இடங்​களில் பாஜக சார்​பில் பூத் கமிட்டி மண்டல நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்று நெல்லையில் முதல் மாநாடு நடை​பெறுகிறது. வண்​ணார்​பேட்டை சத்​திரம் புதுக்​குளம் பகு​தி​யில் உள்ள ரயில்வே மேம்​பாலம் அருகே நடை​பெறும் இந்த மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்க இருக்கிறார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் தமிழகம் வர இருக்கிறார். கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கிறார். பின்னர் ஹெலிகாப்டம் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை தளத்திற்குச்செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு அவரது வீட்டில் தேநீர் விருந்தை முடித்துக்கொண்டு அங்​கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்​கிறார். இந்த பூத் கமிட்டி மாநாட்டில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்​கேற்​கின்​றனர். நெல்​லை, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், கன்​னி​யாகுமரி ஆகிய 5 மக்​களவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். மாநாடு முடிந்​ததும் ஹெலி​காப்​டரில் மீண்​டும் தூத்​துக்​குடி சென்​று, அங்​கிருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு செல்​கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வரு​கை​யையொட்டி 2 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

Next Story