அதிமுகவும், பாஜகவும் நாடகமாடி வருகிறது - ப.சிதம்பரம்

அதிமுகவும், பாஜகவும் நாடகமாடி வருகிறது - ப.சிதம்பரம்

 ப.சிதம்பரம் 

அதிமுகவும், பாஜகவும் பிரிந்து இருப்பது போல் நாடகமாடி வருவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்எல்ஏ தமிழரசி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சி அண்ணா திமுகவின் உதவியுடன் காலுண்ட முயற்சித்தது. தற்போது அதிமுகவும், பாஜகவும் பிரிந்து இருப்பது போல நாடகமாடி வருகின்றனர். இருவரும் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தினாலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது கிடையாது. ஆனால் அவர்கள் இருவரும், திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்று இரு முனைகளில் இருந்தும் தாக்குகின்றனர்.

ஆறு மாதத்திற்கு முன்னர் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் எவ்வளவு நெருக்கமான உறவு இருந்ததோ, அதே வலுவான உறவு தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பாஜகவை ஆதரிக்கும் என்றவர். தற்போது தேர்தல் காலத்தில் இருவரும் பிரிவது போல் நாடகமாடுகின்றனர். இருவரது ரகசிய உறவு விரைவில் வெளிவரும் என ப. சிதம்பரம் தெரிவித்தார்.

Tags

Next Story