பாஜக ஆட்சி பெரு முதலாளிகளுக்கான ஆட்சி - திருமாவளவன்

மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றப்பட்டு விடும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த100 நாள் வேலை திட்டம் இருக்காது. அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகளே செழிப்புடன் இருப்பார்கள். ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பெரம்பலூர், பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் , பேசும் போது மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் ஏழை எளிய மக்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு போடப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த முறை மோடி ஆட்சிக்கு வந்தால் , டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைத்து விடுவார்.

இதனை முறியடிப்பதற்கு, பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, நமது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். மேலும், மோடி ஆட்சி வந்து விட்டால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த100 நாள் வேலை திட்டம் இருக்காது. அம்பானி அதானி போன்ற பெரு முதலாளிகளே செழிப்புடன் இருப்பார்கள். ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள் எனவே மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே .என். நேருவின் மகனான வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். என்று பேசினார்.

முன்னதாக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story