உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X

CM Stalin

உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அய்யன் வள்ளுவன் சிலையை திறந்து வைத்த பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்திருக்கும் தொண்டுதான் மிக முக்கியமானது. கல்வித் தொண்டையும், தமிழ்த் தொண்டையும் சேரந்தாற்றிய வள்ளல் அழகப்பரால் தான் பலர் கல்வி பயின்றுள்ளனர். வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களமாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி. அறிவாலயமாய் திகழும் நூலகங்களை திறந்து வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கொடை உள்ளமும் அறிவுத்தாகமும் கொண்டோர் தங்கள் ஊர்களில் ஒரு நூலகம் அமைக்க வலியுறுத்துகிறேன். பெரிய நூலகம் அமைக்க வசதி இல்லாதோர் தங்கள் ஊரில் சிறிய படிப்பகத்தையாவது அமைக்க வேண்டும். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சால்வைக்கு பதிலாக 2.75 லட்சம் புத்தகங்களை பெற்று நூலகத்திற்கு அனுப்பி வைத்தேன். உங்கள் ஊர்களில் நீங்கள் அமைக்கும் நூலகம் மற்றும் படிப்பகங்கள் தமிழகத்தை வளர்க்கும். இளைஞர் அறிவுச்செல்வத்தை சேர்க்க பாடுபட்டால் பொருட்செல்வம் தானாகவே உங்களை தேடி வரும். உயர்கல்வித்துறையில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருக்க வேண்டுமென கூறி வருகிறோம் என்றார்.

Tags

Next Story