வழுத்தூரில் தமிழக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வழுத்தூரில் தமிழக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள்

வழுத்தூர் காமராஜபுரம் பகுதியில் சக்கராப்பள்ளி சப்தஸ்தான பல்லாக்கு வரக்கோரி வளரும் தமிழக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அமைதி பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வழுத்தூர் காமராஜபுரம் பகுதியில் சக்ராப்பள்ளி சக்கரவாகீஸ்வரர் பல்லாக்கு வர கோரி வளரும் தமிழக கட்சி தலைவர் மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் அமைதிப் பேச்சிவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஆண்டு பல்லாக்கு மேற்படி பகுதிக்கு வருவது தொடர்பான முடிவான அறிக்கைகளை 21-03- 2024க்குள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைதிப்பெயர்ச்சி வார்த்தை கூட்டம் சுமூகமாக நிறைவு பெற்றது இக்கூட்டத்தில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிமலை இந்து சமய அறநிலைத்துறை கண்காணிப்பாளர் தலைமை இடத்து துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ,கிராம உதவியாளர், மற்றும் கிராம முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story