விக்கிரவாண்டியில் போட்டி - கூட்டணி கட்சி ஆலோசனைக்கு பின் முடிவு : அன்புமணி

விக்கிரவாண்டியில் போட்டி - கூட்டணி கட்சி ஆலோசனைக்கு பின் முடிவு : அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் கலந்து பேசி முடிவு பின்னா் தெரிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிா்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:பாமக நிா்வாகக் குழுக் கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் குறித்து கட்சியின் நிா்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. இடைத்தோ்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் கலந்து பேசி முடிவு பின்னா் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.பேட்டியின்போது, கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே. மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

Tags

Next Story