திராவிட இயக்கத்தின் தொட்டில் ஈரோடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திராவிட இயக்கத்தின் தொட்டில் ஈரோடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு தந்தை பெரியார் பிறந்த மண், திராவிட இயக்கத்தின் தொட்டில் ஈரோடு, 2023 -2024 ம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஈரோடு தந்தை பெரியார் பிறந்த மண் என்ற உதயநிதி ஸ்டாலின் திராவிட இயக்கதின் தொட்டில் ஈரோடு என்றார். 2023 -2024 ம் ஆண்டிற்கு மகளிர் குழுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் , இதுவரை 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மகளிர் சுய உதவிகள் தயாரிக்கும் பொருட்களை வாகனத்தில் எடுத்துச்சென்று விற்பனை செய்ய 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம் 3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிப்பொருட்களை தான் நான் பயன்படுத்துகிறேன். இந்தியாவிலேயே விளையாட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு என்றார்.

Tags

Next Story