முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு

பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு

பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பொத்தனூர், வெங்கரை, கூடச்சேரி, கந்தம்பாளையம், இரும்புப்பாலம், வசந்தபுரம், ராசாம்பாளையம் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொத்தனூர் பேரூராட்சியில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ என்ஜினியர் சேகர் தலைமையில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வில் பொத்தனூர் பேரூர் செயலாளர் எஸ்எம் நாராயணன் முன்னிலை வகித்தார். கூடச்சேரியிலும் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் பரமத்தி வேலூா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story