பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்:அதிமுக வேட்பாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்:அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் ராணி வீடு வீடாக சென்று பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பம்மம், மார்த்தாண்டம், குலசேகரம்ரோடு,வடக்குதெரு, காளைசந்தை, குழித்துறை, கிறிஸ்துபுரம், கழுவன்திட்டை உள்ளிட்ட பகுதிகளில் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம் தலைமையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராணி வீடு,வீடாக சென்று இரட்டை கிளை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பத் தலைவிகள் வேட்பாளரை வரவேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பதாக கூறினார்.

அதற்கு வேட்பாளர் ராணி நன்றி கூறியதோடு பெண்களின் முன்னேற்றத்திற்கு என்றும் ஒரு துணை நிற்போம் எனவும் உறுதி அளித்தார் இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகள் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அவர் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story