ரகசியங்களை சொன்னால் இபிஎஸ் சிறை செல்வார்-ஓ.பன்னீர்செல்வம்

ரகசியங்களை சொன்னால் இபிஎஸ் சிறை செல்வார்-ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர் செல்வம் 

மூன்று முறை ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் தன்னிடம் தான் வந்து செல்லும் எனவும், சில ரகசியங்களை சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை செல்ல வேண்டி இருக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

கோவை:சூலூர் அருகே தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தொண்டர்கள் இடையே பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார போதை காரணமாகவே கடந்த கால தேர்தகளில் தோற்றது எனவும், அதிமுக இயக்கம் தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் எனவும் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருப்பதாக பேசிய அவர் உண்மையான தொண்டர்களை மீட்டு எடுக்க போராடி வருவதாகவும் எந்த காலத்திலும் தனிகட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றார்.

வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கபட்டுள்ளது என்றார்.மூன்று முறை ஆட்சியில் தான் இருந்தபோது கோப்புகள் தன்னிடம் வந்து செல்லும் எனவும் சில ரகசியங்களை சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை தான் செல்ல வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story