புதிய நியாய விலை கடை திறப்பு விழா

புதிய நியாய விலை கடை  திறப்பு விழா

நியாயவிலைக்கடை திறப்பு

புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் தின்னலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 7.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.60 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதிராஜசேகர் ஏற்பாட்டில் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட துணை செயலாளர் கோகுல கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முன்னதாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தின்னலூர் கிராமத்தில் புதிய கழக கொடி ஏற்றி வைக்கப்பட்டு கழக கல்வெட்டு திறக்கப்பட்டது.

Tags

Next Story