காடுவெட்டி குரு மணிமண்டபத்தில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற வேட்பாளர்

காடுவெட்டி குரு மணிமண்டபத்தில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற வேட்பாளர்

மாலை அணிவித்த பாமக வேட்பாளர்

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி மில் உள்ள மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி பெரம்பலூர் மாவட்ட பாமக செயலாளர் செந்தில் குமார், அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் காடுவெட்டி ரவி உள்ளிட்ட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகின்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்று தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நிச்சயமாக வெற்றி பெற்று வெற்றிக்கனியை மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்போம் எனவும் உறுதியேற்றனர். பேட்டி : ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர்

Tags

Next Story