கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் 

அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் ஊத்தங்கரையில் கட்சி நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எதிர்வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் கிருஷ்ணகிரி பகுதியில் போட்டியிட கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஊத்தங்கரை ரவுண்டான பகுதியில் அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது ஊற்றங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேடி, வேங்கன், மற்றும் தேமுதிக நிர்வாகிகள் முன்னிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஜெய்பிரகாஷ் அவர்களுக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து, சால்வைகள் அணிவித்தனர், மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டனி கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story