புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X

அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை தான் வழங்கி கொண்டிருக்கிறது. தொடக்க கல்வி மாணவர்களுக்கே பொதுத்தேர்வு என்பது பள்ளிக்கு மாணவர்களின் வருகையை குறைக்கும். இடைநிற்றலை அதிகரிக்கும். தேசிய கல்வி கொள்கையை விட இடைநிற்றலை அதிகரிக்கும். மீண்டும் ஒரு மொழிப்போரை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. தமிழின் பெருமையை பிரதமர் முன்னெடுத்துள்ளதாக கூறி இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் கூறுகிறார். இளைய சமுதாயத்திற்காக ஏற்படுத்தியுள்ளீர்கள் என்றால் நீங்கள் விதிகள் போட்டு நிர்பந்திக்கக்கூடாது. மருத்துவம் முதல் இஸ்ரோ வரை இருமொழிக்கொள்கையை பயன்படுத்திய அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர். தூண்டில் போட்டு மீன் சிக்காதா என்ற வகையிலேயே மத்திய அமைச்சரின் கடிதம் உள்ளது. 1968 முதல் அண்ணா உருவாக்கிய இருமொழிக்கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறது. அண்ணா முதல் ஜெயலலிதா வரை எதிர்த்த மும்மொழி கொள்கையை முதல்வரும் எதிர்கிறார். மூன்றாவது மொழி கற்பது மொழி திணிப்பு, மாநில உரிமையை பறிப்பதாக அமைகிறது. 3-வது மொழியை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இந்தியை விரும்பி கற்பதை ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டுள்ளன. மாணவன் காலில் சங்கிலியை கட்டி ஓட விடும் பணியை மத்திய அரசு செய்கிறது. தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது. மத்திய அரசால் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது. மத்திய அரசு நிபந்தனையின்றி நிதியை வழங்க வேண்டும் என்றார்.

Tags

Next Story