நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்: பாமக வேட்பாளர்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்: பாமக வேட்பாளர்

பாமக வேட்பாளர் வாக்கு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தேசத்தை மேலும் வளர்ச்சி பெற செய்வார் என பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தேசத்தை மேலும் வளர்ச்சி பெற செய்வார் - பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் பேச்சு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை அருகே மருத்துவகுடியில்,

உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மக.ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் :- விவசாயி ஆகிய நான் வேட்பு மனு தாக்கல் செய்த போது விவசாயியாக வந்து வேட்ப மனு தாக்கல் செய்தேன்.

தற்போது விவசாய ஆராய்ச்சி மையமான ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்முறையாக வாக்கு மையம் அமையப்பெற்று அதில் முதல் வாக்காளராக எனது ஓட்டினை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தேசத்தை வளர்ச்சி பாதையில் மேலும் பெருமை கொள்ளச் செய்வார்.

அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு வெற்றி பெற்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற பணியாற்றுவேன் என்றார்.

Tags

Next Story