நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் பேசுகிறார் - அமைச்சர் முத்துசாமி

நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் பேசுகிறார் - அமைச்சர் முத்துசாமி

 அமைச்சர் முத்துசாமி  

தமிழக அரசின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தவறான செய்தியை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார் என்றும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்து வருகிறார் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருநகர் காலனி அரசு தொடக்க பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் பொதுமக்கள் குறைத் தீர்ப்பு முகாமில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி , தமிழக அரசின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தவறான செய்தியை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்,புயல் மற்றும் தென் மாவட்டங்களில் முதல்வர் தனித்தனியாக ஆய்வு செய்து அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் என கூறினார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைந்து மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் நினைத்து வருவதாக கூறினார். சரியான முறையில் தான் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். இதில் தவறு இருப்பதாக சொன்னால் அதற்கு விளக்கம் அளிக்கிறார் என்றார்.

Tags

Next Story