முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடியில் அன்னதானம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடியில் அன்னதானம்

முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் , மதிநகர் ,பகுதியில் பொதுமக்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்,கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து கசம் பகுதியில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் பால குடும்ப இல்லத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் வேலூர் மாநகர துணை மேயர் சுனில் குமார் அவர்களும் காட்பாடி திமுக நிர்வாகிகள் ஆகியோர் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. பால குடும்ப இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பேனா ,நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

இதில் குழந்தைகள் கேக் வெட்டும் பொழுது முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல் பாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story