முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அமுதியோர்களுக்கு அறுஞ்சுவை விருந்து

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அமுதியோர்களுக்கு அறுஞ்சுவை விருந்து

முதியவர்களுக்கு விருந்து வழங்கல்

கும்பகோணம் அருகே மாங்குடி கிராமத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா ஏற்பாட்டில் முதியோர்களுக்கு அறுஞ்சுவை விருந்து வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி, மாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சீனியர்ஸ் ரெசிடென்ஸி முதியோர் காப்பகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு அருஞ்சுவை விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் கோ.க.அண்ணாதுரை, பத்மாவதி கிருஷ்ணராஜ், திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் சுந்தர ஜெயபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா, சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story