மாநிலங்களவையில் – கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கோரிக்கை ! | கிங் நியூஸ் 24x7 | அரசியல்

K. R. N. ராஜேஷ்குமார்
தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் – என மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கோரிக்கை விடுத்தார்.
தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்திட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேலும் புதுச்சத்திரத்தில் மேம்பாலம் அமைக்கவும் வேண்டும் என்று கோரிக்கையை - மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தர்மபுரியில் இருந்து நாமக்கல் வரையிலான 119.5 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை -44 பாதையை 4 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை இந்த மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். திட்டம் தற்போது விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) கட்டத்தில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை தமிழகத்தின் தொழில்துறை மற்றும் விவசாய மையங்களை இணைக்கிறது, பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி இடையே சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்குகிறது.
சேலத்திற்கும் – நாமக்கல்லுக்கும் இடையே உள்ள பகுதி புதுச்சத்திரம் ஊராட்சி வழியாக செல்கிறது, இது அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் பல தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இப்பகுதி மக்கள், புதுச்சத்திரம் பகுதியை நம்பியே உள்ளனர். எனவே,பத்து அபாயத்தைக் குறைப்பதற்கும், அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேம்பாலம் அமைப்பது அவசியம். எனவே, இதை டி.பி.ஆரில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சேலம் முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. இங்கு செயல்பாட்டு விமான நிலையத்தைக் கொண்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் கோழிப்பண்ணைகளின் மையமாக உள்ளது. இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் 80% பங்களிக்கிறது, மேலும் இந்த முக்கிய வர்த்தக பாதை இந்த நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இந்த பகுதி தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது, இதற்கு அவசர கவனம் தேவை.
எனவே, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பிராந்தியத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத் திற்கு முன்னுரிமை அளிக்குமாறு நான் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
